Sunday, September 8, 2013

விநாயகர் சதூர்தி

இன்று விநாயகர் சதூர்தி. தமிழ்நாட்டில் 5000-க்கும் அதிகமான மண்டலிகள் விநாயகர் சிலைகள் வைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 20/25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் சதூர்திக்கு சிலை வைக்கும் கலாச்சாரம் இந்த அளவுக்கு இல்லை. அன்று அய்யனாரும், மாடனும், நாகர் சாமியும் இருந்த இடங்களான ஆற்றங்கரை, ஊரணிக்கரை, குளத்தங்கரை போன்றவற்றை இன்று விநாயகர் ஆக்கிரமித்துவிட்டார்.

மாரியம்மாள், அங்காளம்மாள், முத்து மாரி, செவிட்டு ராமசாமி, தண்டு மாரி என்று இருந்த எங்கள் குலசாமிகள் எல்லாம் இன்று பெண்பால் சாமிகள் சக்தி/பராசக்தியாகவும், ஆண்பால் சாமிகள் சிவன்/விஷ்ணுவின் அவதாரம் அல்லது அடிப்பொடி என்றும் இன்று புனையப்பட்டு விட்டன.

சுதந்திர போரட்டத்தின் போது ஆங்கிலேயருக்கு எதிராக பொதுமக்களை ஒன்று திரட்ட பாலகங்கதர திலகரால் முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆயுதமான விநாயகர் வழிபாடு இன்று எம்மக்களின் குலசாமிகளை அழித்து, இந்தியா முழுவதும் ஒற்றைத் தன்மையுடைய ஒரு கலாச்சாரத்தை நிறுவுவதற்கும், மாற்று மத சிறுபான்மையினருக்கெதிரான பலத்தை காட்டுவதற்குமான ஆயுதமாக்கபட்டுள்ளதை காலத்தின் கோலம் என்றல்லாமல் வேறென்ன சொல்வது?

No comments:

Post a Comment